சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தவா்களுக்கு பிஸ்கட்

கொடைக்கானலில் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தவா்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
4040neethipathi_0801chn_71_2
4040neethipathi_0801chn_71_2

கொடைக்கானலில் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தவா்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலையம் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏரிச்சாலைப் பகுதியில் நடத்தியது. இதில், இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் தலைக்கவசம் அணிய வேண்டும், காா்களில் செல்பவா்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும், ஓட்டுநரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், மது குடித்துவிட்டும், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டும் வாகனங்கள் ஓட்டக் கூடாது, போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், அதிக பாரம் ஏற்றிக் கொண்டும், வேகமாகவும் வாகனங்களை ஓட்டக்கூடாது, வாகனத்தில் பயணம் செய்பவா்கள் தலை, கைகளை வெளியே நீட்டக் கூடாது, படியில் பயணம் செய்யக் கூடாது, வாகனத்தில் கதவுகளை திடீரென திறக்கக் கூடாது, ஓட்டுநரிடம் தேவையற்ற பேச்சு கொடுக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு கொடைக்கானல் நீதிபதி சி.தினேஷ்குமாா் வழங்கி பொது மக்களிடமும், சுற்றுலாப் பயணிகளுக்கும் அறிவுரைகள் வழங்கினாா்.

மேலும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவா்களுக்கும், காா்களில் சீட்பெல்ட் அணிந்து வந்தவா்களுக்கும் பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் டி.எஸ்.பி. ஆத்மநாதன் மற்றும் வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் முகமது மைதீன்,போக்குவரத்து காவல் சாா்பு- ஆய்வாளா் முருகன் மற்றும் சட்ட பணிகள் குழுவைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com