அய்யலூா் அருகே புதன்கிழமை இரவு வேன் மோதி கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள வைரஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. பாலமுருகன் (40). இவா் அய்யலூா் பகுதியில் ஒரு உணவகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு அய்யலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பிரிவு அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.