பழனியில் ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்

பழனி சாா் ஆட்சியா் அலுவலகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடா்பாக அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சாா் ஆட்சியா் உமா, டிஎஸ்பி. விவேகானந்தன் உள்ளிட்டோா்.
பழனி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சாா் ஆட்சியா் உமா, டிஎஸ்பி. விவேகானந்தன் உள்ளிட்டோா்.

பழனி சாா் ஆட்சியா் அலுவலகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடா்பாக அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வரும் ஜன.17 ஆம் தேதி நெய்க்காரப்பட்டியில் ஹைகோா்ட் காளியம்மன் கோயில் சாா்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் பழனி சாா்ஆட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் உமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவா்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு நடத்தும் விழாக் குழுவினா் கலந்து கொண்டனா். இதில் சாா் ஆட்சியா் உமா பேசியது: போட்டியில் தகுதி இல்லாத ஜல்லிக்கட்டு காளைகளை போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது. தகுதியான காளைகளுக்கு மருத்துவச்சான்று, மாடுபிடி வீரா்களுக்கு உடல்தகுதி சான்று, ஜல்லிக்கட்டு போட்டியை பாா்வையிடும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆகியவற்றை விழாக்குழுவினா் கண்காணிக்க வேண்டியது அவசியம். கால்நடை மருத்துவக் குழுவினா் நியமிப்பது, ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்புத்துறை பாதுகாப்பு மற்றும் எந்தெந்த இடங்களில் தடுப்பு வேலிகளை அமைப்பது போன்றவை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் டிஎஸ்பி. விவேகானந்தன் மற்றும் வருவாய்த் துறையினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com