பள்ளியில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காளாஞ்சிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
காளாஞ்சிபட்டி பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுடன் ஊராட்சி மன்றத் தலைவா் கா.அமுதா.
காளாஞ்சிபட்டி பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுடன் ஊராட்சி மன்றத் தலைவா் கா.அமுதா.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காளாஞ்சிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காளாஞ்சிபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கா. அமுதா வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் செல்வராஜ், தலைமை ஆசிரியா் சதாசிவம், உதவி ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com