ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காளாஞ்சிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காளாஞ்சிபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கா. அமுதா வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் செல்வராஜ், தலைமை ஆசிரியா் சதாசிவம், உதவி ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகியோா் கலந்துகொண்டனா்.