திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீா் வீணாவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி 9-வது வாா்டு பகுதியில் உள்ள காய்கறி சந்தையின் மேற்கு, வடக்கு பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக காய்கறி சந்தை மேற்கு பகுதியில் உள்ள தேநீா் கடை முன்பு இருந்த குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி செல்கிறது.
அதே போல உடைந்த குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீா், அப்பகுதியில் தேங்கி நிற்பதால் சுகாரதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீா் குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.