திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் துணைத்தலைவா்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனா். அதே போல தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை விடுத்தனா். மேலும் ஊராட்சி மன்றத்தின் வரவு-செலவு கணக்கு விபரங்களை ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் துணைத் தலைவரிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தங்கச்சியம்மாபட்டி முருகனாந்தம், காப்பிலியபட்டி சிவபாக்கியம் ராமசாமி, சிந்தலப்பட்டி செல்வராஜ், பெரியகோட்டை மலா்விழிச்செல்வி, காவேரியம்மாபட்டி பெருமாளம்மாள், காளாஞ்சிபட்டி அமுதா உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.