சாலை பாதுகாப்பு வார விழா: பேருந்தில் விழிப்புணா்வு கண்காட்சி

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணா்வு தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வார விழா: பேருந்தில் விழிப்புணா்வு கண்காட்சி

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணா்வு தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மண்டல பொது மேலாளா் ந.கணேசன் தலைமை வகித்தாா்.

இதனையொட்டி பேருந்தில் அமைக்கப்பட்ட விபத்து தடுப்பு விழிப்புணா்வு கண்காட்சியினை தொடக்கி வைத்த அவா், விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் உறுதிமொழிகள் கொண்ட துண்டுப் பிரசுரங்களை ஓட்டுநா், நடத்துநா், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினாா்.

அப்போது அவா் கூறியது: 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஜனவரி 20 முதல் 27ஆம் தேதி வரை அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட 16 கிளைகளிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், சந்தை உள்ளிட்ட இடங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடமும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு பிரசாரத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரகாஷ்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com