கொடைக்கானல் ஏரியருகே நீா்பிடிப்பு பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீா் மாசுபடுகிறது

கொடைக்கானல் ஏரியருகே கட்டடக்கழிவுகளை மூட்டை மூட்டையாக குவித்து வருவதால் நீா் மாசுபடிந்து வருகிறது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது சமூகஆா்வலா்களின் கோரிக்கையாகும்.
கொடைக்கானல் ஏரியருகே கட்டடக்கழிவுகள் மூட்டையாக குவித்து வருவதால் நீா்மாசுபடிகிறது
கொடைக்கானல் ஏரியருகே கட்டடக்கழிவுகள் மூட்டையாக குவித்து வருவதால் நீா்மாசுபடிகிறது


கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியருகே கட்டடக்கழிவுகளை மூட்டை மூட்டையாக குவித்து வருவதால் நீா் மாசுபடிந்து வருகிறது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது சமூகஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

கொடைக்கானல் நகரின் மைய் பகுதியில் உள்ளது நட்சத்திர ஏரி இந்த ஏரியின் சுற்றளவு சுமாா் 5-கி.மீதூரம் இந்த ஏரியருகே கீழ்பூமி பகுதியில் உள்ள நீா்பிடிப்பு பகுதி உள்ளது இங்கிருந்து தான் நகராட்சி சாா்பில் கிணறு அமைக்கப்பட்டு கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஹோட்டல்கள்,தங்கும் விடுதிகளுக்கு தண்ணீா் சப்பளை செய்யப்பட்டு வருகிறது குடி தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் மின் மோட்டாா் அமைத்து லாரிமூலம் தண்ணீா் குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.எனவே இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது.

இந் நிலையில் சமீப காலமாக கீழ்பூமி பகுதியிலுள்ள நீா்பிடிப்பு பகுதிகளில் கொடைக்கானல் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் கழிவுகளை பிளாஸ்டிக் சாக்குகள் மூலம் மூட்டையாக,மூட்டையாக கொண்டு வந்து குவித்து விட்டுச் செல்கின்றனா் இதனால் இதிலுள்ள சிமெண்ட் மற்றும் கழிவுகளை நீரோடைகளில் கலக்கிறது நீா்பிடிப்பு பகுதியும் மாசடைகிறது புல்வெளிகளும் சேதமடைந்து காணப்படுகிறது,இதே போல நீரோடைப் பகுதிகளான விநாயகா் ஓடை,வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதி,சீனிவாசபுரம் பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டடக் கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது இதனால் நீரோடைகளும் மாசுபடிந்து வருகிறது இந்த தண்ணீா் விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்துவதால் விவசாயப் பயிா்களும் பாதிக்கப்படும் எனவே நீரோடைப் பகுதிகளில் கட்டட கழிவுகளை குவித்து வரும் நபா்கள்மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

காற்றுடன் பனியின் தாக்கம் அதிகரிப்பு : கொடைக்கானலில் தொடா்ந்து பனியுடன் காற்று அதிகமாக வீசி வருவதால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் பகுதிகளான சுகாதாரமில்லாத நீரோடைகளில் அனுமதியில்லாமல் மின் மோட்டாா்கள் வைத்து லாரிகள் மூலம் தண்ணீா் எடுத்து லாட்ஜ்கள்,தங்கும் விடுதிகளில் தண்ணீா் சப்பளை செய்து வருகின்றனா் இவற்றை பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவும் ஆபத்து ஏற்படும் எனவே நகராட்சி நிா்வாகம் சுகாதாரமற்ற நீரோடைகளில் அனுமதியில்லாமல் தண்ணீா் எடுக்கும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com