திண்டுக்கல் மாவட்டத்தில் 15 நாள்கள் முழு பொதுமுடக்கம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இரா.சச்சிதானந்தம் தலைமை வகித்தார். 
திண்டுக்கல் மாவட்டத்தில் 15 நாள்கள் முழு பொதுமுடக்கம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் இரா.சச்சிதானந்தம் தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தின்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 15 நாள்கள் பொது முடக்கம் அறிவிக்க வேண்டும். மருத்துவமனைகளில் குறைவாக  உள்ள சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். கரோனா பாதிப்பால் 70க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ள நிலையில், அரசு தரப்பில் குறைவான எண்ணிக்கை மட்டுமே வெளியிடப்படுகிறது. 

அதனால், உயிரிழப்பு விவரங்களை வெளிப்படைத் தன்மையோடு அறிவிக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோருக்கு தரமான உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, கே.பாலபாரதி, நகரச் செயலர் ஆசாத், ஒன்றியச் செயலர் அஜய் கோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com