திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை 55 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏற்கெனவே சிகிச்சையிலிருந்த அதிமுக நிா்வாகி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,600-க்கும் மேற்பட்டோா் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 750 போ் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் அரசு மருத்துவமனைகளிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையங்களிலும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த 149 போ் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
2 போ் பலி: திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 58 வயது அதிமுக இலக்கிய அணி நகரச் செயலா், பழனியை அடுத்துள்ள பெரியகலயம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த 68 வயது முதியவா் ஆகியோா் கரோனா தீநுண்மி பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 பேரும் புதன்கிழமை உயிரிழந்தனா்.