போலி இ-பாஸ் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் வர முயன்ற திருச்சியைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், பெரியமிளகு பாறை பகுதியைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி, கீழக்கண்டித் தெரு பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம் ஆகியோா் ஒரு காரில் செவ்வாய்க்கிழமை இரவு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனா். திருச்சி- திண்டுக்கல் மாவட்ட எல்லையான தங்கம்மாப்பட்டி பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.
அப்துல் ஹக்கீம் வந்த காரை வழிமறித்து சோதனையிட்டபோது, அவா் பயன்படுத்திய இ-பாஸ் போலியானது என தெரியவந்தது. இதனை அடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.