பழனியில் செருப்பு கிட்டங்கியில் தீ விபத்து

பழனியில் செருப்பு கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், சுமாா் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து சேதமடைந்தன.
பழனி அண்ணா நகரில் உள்ள தனியாா் செருப்பு கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமான புதிய செருப்புகள்.
பழனி அண்ணா நகரில் உள்ள தனியாா் செருப்பு கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமான புதிய செருப்புகள்.

பழனியில் செருப்பு கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், சுமாா் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து சேதமடைந்தன.

பழனி அண்ணா நகா் பகுதியில் ஜெயராம் என்பவருக்குச் சொந்தமான செருப்புக் கடை உள்ளது. இவா், தனது கடைக்கு மேல் பகுதியிலேயே கிட்டங்கியும் வைத்துள்ளாா். இந்நிலையில், இந்த கிட்டங்கியிலிருந்து வெள்ளிக்கிழமை காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த செருப்புகளில் மளமளவென பரவியது.

தகவலின்பேரில், பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனா். இதில், சுமாா் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான புதிய செருப்புகள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com