பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: மாா்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு தொடா்பான விசாரணையை மாா்ச் 23ஆம் தேதிக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு தொடா்பான விசாரணையை மாா்ச் 23ஆம் தேதிக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன், கடந்த 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல்லை அடுத்துள்ள நத்தவனப்பட்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தாடிக்கொம்பு போலீஸாா், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சோ்ந்த சுபாஷ் பண்ணையாா் உள்பட 18 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சண்முகம், தாராசிங், அருள்மொழி ஆகிய 3 போ் மட்டுமே ஆஜரானாா்கள். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை மாா்ச் 23 ஆம் தேதிக்கு நீதிபதி இளங்கோவன் ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com