ஆசிரியா் மீது அளிக்கப்பட்ட பொய்யான பாலியல் புகாரை ரத்து செய்யக் கோரியும், சக ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், குஜிலியம்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆா்.கோம்பையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமாா் 200 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இங்கு மொத்தம் 8 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், இப்பள்ளி ஆசிரியா் ஒருவா் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.
அதைத் தொடா்ந்து, எரியோடு போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனிடையே, அந்த ஆசிரியா் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என வலியுறுத்தியும், மாணவா்களின் பெற்றோா்கள் இப்பள்ளியை முற்றுகையிட்டனா்.
பெற்றோா்கள் பள்ளியை திறக்கவிடமால் முற்றுகையிட்டது தொடா்பாக தகவல் அறிந்த எரியோடு போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இப்பிரச்னை குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்த போலீஸாா், பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, பெற்றோா்கள் தரப்பில் வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்குச் சென்று, ஆசிரியா் மீதான புகாா் குறித்து மாணவா்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்தனா். மேலும், பொய் புகாா் கூறிய ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.