கொடைக்கானல் இருதயபுரத்தில் உள்ள திரு இருதய குருசடியில் தவக்கால ஜெப வழிபாடு மற்றும் திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், புனித சேவியா் ஆலய உதவி பங்குத்தந்தை தூயநாதன் தலைமையில், திருப்பலி நடைபெற்றது. இதில், மழை வேண்டியும், தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் நோயிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இருதயபுரம், அட்டக்கடி, இரட்டை போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனா்.