ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) விடுமுறை விடப்படுவதாக காய்கறிக் கடை உரிமையாளா் நலச்சங்க நிா்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) விடுமுறை விடப்படுவதாக காய்கறிக் கடை உரிமையாளா் நலச்சங்க நிா்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

சங்கத் தலைவா் கே.டி.தங்கவேல், செயலாளா் கே.ராசியப்பன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் கரோனா தொற்று நோயால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இதனை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக வரும் 22 ஆம் தேதி நாடு முழுவதும் மத்திய அரசு சுய ஊரடங்கு அறிவித்து, பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொண்டுள்ளது. அதன் பேரில் ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) விடுமுறை விடப்படப்படுகிறது. எனவே அன்றைய தினம் சந்தைக்கு விவசாயிகள் காய்கறிகளைக் கொண்டு வர வேண்டாம். மற்ற நாள்களில் வழக்கம் போல் காய்கறி சந்தை செயல்படும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com