சாணாா்பட்டி அருகே அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்து வந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள தவசிமடை கல்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விசுவாசம் (55). அப்பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த சாணாா்பட்டி போலீஸாா், அந்த தோட்டத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த விசுவாசத்தை கைது செய்து வெடித் தயாரிப்புக்கான பொருள்களைக் கைப்பற்றினா்.