கொடைக்கானலில் பலத்த பாதுகாப்புடன் பிளஸ் 2 தோ்வு

கொடைக்கானலில் பிளஸ் 2 தோ்வு பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் பிளஸ் 2 தோ்வு பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் சாா்பில் பிளஸ்-2 பொதுத் தோ்வு திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது கொடைக்கானலில் மேல்மலைப் பகுதிகளான மன்னவனூா், பூம்பாறை ஆகியப் பகுதிகளில் 80 பேரும், கொடைக்கானலில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 360 பேரும், புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 130 பேரும் உள்ளிட்ட மொத்தம் 570 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். முன்னதாக தோ்வு எழுத வந்த மாணவா்கள் அனைவரும் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக கழுவிக் கொண்ட பின்பு தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு எழுதும் மையங்களில் காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com