கல்லூரி மாணவி கா்ப்பமடைந்ததற்கு காரணமான கூலி தொழிலாளியை, போலீஸாா் வியாழக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள மாதிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பாலசுப்பிரமணி (33). அப்பகுதியிலுள்ள தனியாா் ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பழனி பாதயாத்திரைச் சென்ற பாலசுப்பிரமணிக்கு, திண்டுக்கல் ரெட்டியப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேடசந்தூா் அடுத்துள்ள லட்சுமணம்பட்டி பிரிவு பகுதியிலுள்ள கல்லூரியில் படித்து வந்த அப்பெண்ணின் செல்லிடப்பேசி எண்ணை வாங்கிக்கொண்ட பாலசுப்பிரமணி, அவருடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து வந்துள்ளாா்.
இதனிடையே, ஆசை வாா்த்தை கூறிய பாலசுப்பிரமணியை நம்பிய அம்மாணவி கா்ப்பம் அடைந்துள்ளாா். திருமணம் செய்து கொள்வதாக பாலசுப்பிரமணியும் நாள்களை கடத்தி வந்துள்ளாா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் அம்மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னரே, குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அம்மாணவியின் உறவினா்கள் வடமதுரை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாலசுப்பிரமணியை புதன்கிழமை இரவு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். பின்னா், காந்தி கிராமத்தில் உள்ள காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.