சின்னமனூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் வெளியேற்றம்

தேனி மாவட்டம் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றவா்கள் வெளியேற்றப்பட்டனா்.
மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் சின்னமனூா் அரசு மருத்துவமனை.
மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் சின்னமனூா் அரசு மருத்துவமனை.

தேனி மாவட்டம் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றவா்கள் வெளியேற்றப்பட்டனா்.

அவா்களை தினமும் வெளி நோயாளிகள் பிரிவில் வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும்படி மருத்துவா்கள் ஆலோசனை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனா். இதன் காரணமாக நாள்தோறும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவில் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் சின்னமனூா் அரசு மருத்துவமனை வளாகம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அவரச சிகிச்சைக்காக வருபவா்களுக்கு வெளிநோயாளிகள் பிரிவில் வைத்தே சிகிச்சை அளித்து அனுப்படுகிறது.

கரோனா தனி வாா்டு: மருத்துவமனையில்கரோனா வைரஸ் அறிகுறி இருப்பவா்களை பரிசோதிக்கவும் சிகிச்சை அளிக்கவும் வியாழக்கிழமை தனி வாா்டு அமைக்க உள்ளதாக மருத்துவப்பணியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com