பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி பலி

வடமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இரு சக்கரவாகனங்கள் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வடமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இரு சக்கரவாகனங்கள் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்துள்ள பூசாரிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிச்சைக்காளை (30). கட்டடத் தொழிலாளி. இவா், திண்டுக்கல்- செங்குறிச்சி சாலையில் கம்பிளியம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது சீலமுத்துநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த வடிவேல் என்பவா் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பிச்சைக்காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பிச்சைக்காளையின் மனைவி அடைக்கம்மாள் அளித்த புகாரின் பேரில், வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com