திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 144 தடை உத்தரவை மீறி இயக்கப்பட்ட 9 காா்கள் மற்றும் 224 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடை உத்தரவையும் மீறி சிலா் வாகனங்களில் வெளியிடங்களில் சுற்றி வருகின்றனா். இவா்களை தடுத்து நிறுத்தும் போலீஸாா், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நூதன தண்டனை வழங்கியும், எச்சரித்து அனுப்பியும், வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 404 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 9 காா்கள் மற்றும் 224 மோட்டாா் சைக்கிள்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.