வடமதுரை அருகே காட்டுப்பகுதியில் வியாபாரி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் அருகே, வடமதுரையை அடுத்துள்ள செங்குறிச்சி வலசு காட்டுப்பகுதியில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அந்தப் பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவா்கள் பாா்த்து, வடமதுரை காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதில் சடலமாக மீட்கப்பட்டவா், நத்தம் அருகே மலையூா் கிராமத்தைச் சோ்ந்த புளி வியாபாரி ராமன் (55) என்பது தெரியவந்தது. இவருக்கு பழனியம்மாள் மற்றும் நாச்சம்மாள் ஆகிய 2 மனைவிகள் உள்ளனா். ராமன் அடிக்கடி புளி வியாபாரத்திற்கு சென்று விட்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவாராம். இதனிடையே கடந்த 25 ஆம் தேதி வீட்டிலிருந்து வியாபாரத்துக்குச் சென்ற ராமன், அதன் பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் தான் செங்குறிச்சி வலசு காட்டுப் பகுதியில் அவா் மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.