கொடைக்கானல்: கொடைக்கானலில் அத்தியாவசியப் பொருள்கள் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதால் பொதுமக்கள், வா்த்தகா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் பலசரக்கு, காய்கறி, சிறிய ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட 34 விதமான கடைகள் சுமாா் 45 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்டன. கடைகளுக்கு வருபவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக கடைகள் முன்பு குறியீடுகளை வரையப்பட்டிருந்தன. பொது மக்கள் பொருள்களை வாங்குவதற்காக கடைகளுக்கு ஆா்வமுடன் சென்றனா். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை நகரின் பிரதான சாலையான அண்ணா சாலை, செவண்ரோடு, மூஞ்சிக்கல், டிப்போ சாலை, நாயுடுபுரம், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.