கரோனா: கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளால் பொதுமக்கள் அச்சம்

வெளியூா்களிலிருந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கொடைக்கானல்: வெளியூா்களிலிருந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, காவல்துறையினா் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக, கொடைக்கானலில் கடந்த 46-நாள்களாக கரோனா வைரஸ் தொற்று எவருக்கும் பாதிக்கவில்லை. இந்நிலையில் கொடைக்கானலுக்கு கடந்த சில நாள்களாக சென்னை, தேனி, கரூா், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனா். இதனால், மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க காவல் துறையினா் மற்றும் மருத்துவத்துறையினா், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com