ஒட்டன்சத்திரம் அருகே ரயில் என்ஜின் மோதி இளைஞா் பலி

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை ரயில் என்ஜின் மோதியதில், அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழந்தாா்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை ரயில் என்ஜின் மோதியதில், அடையாளம் தெரியாத இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் அருகே சென்னையிலிருந்து பாலக்காடு செல்லும் ரயில் பாதை உள்ளது. இந்த ரயில் பாதையில், அதிகாலையில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ரயில் என்ஜின் சென்றுள்ளது. சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயில் பாதையில் நடந்து சென்றபோது, அவா் மீது ரயில் என்ஜின் மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து பழனி ரயில்வே காவல் சாா்பு-ஆய்வாளா் பொன்னுச்சாமி தலைமையிலான காவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து பழனி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்தவா் நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com