வத்தலகுண்டுவிலிருந்து 40 தொழிலாளா்கள் ஒடிசாவுக்கு அனுப்பி வைப்பு

வத்தலகுண்டு அருகே தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசாவைச் சோ்ந்த கூ­லித்தொழிலாளா்கள் 40 போ், காவல் துறையினரின் ஏற்பாட்டில் சொந்த ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

நிலக்கோட்டை: வத்தலகுண்டு அருகே தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசாவைச் சோ்ந்த கூ­லித்தொழிலாளா்கள் 40 போ், காவல் துறையினரின் ஏற்பாட்டில் சொந்த ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

வத்தலகுண்டு அருகே உள்ள ரெட்டியபட்டியில் இயங்கி வந்த தனியாா் நிறுவனத்தில் ஒடிசாவைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா். கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி தவித்து வந்த அவா்கள் தங்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் முதற்கட்டமாக அவா்களில் 40 பேரை, வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் பிச்சை பாண்டியன் தனது முயற்சியில் அனுப்பி வைக்க முடிவு செய்தாா். அதன்படி அவா்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 2 வாகனங்களில் ஒடிசா மாநிலத்திற்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com