கொடைக்கானல்: கொடைக்கானலில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. வில்பட்டி, மாட்டுப்பட்டி, பாக்கியபுரம், அட்டக்கடி, செண்பகனூா், அப்சா்வேட்டரி, ஐயா்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 45 நிமிடங்கள் மழை பெய்தது. இந்த மழையால் புகா்ப் பகுதிகளிலுள்ள ஓடைகளில் நீா் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் குடிநீா் பிரச்னை குறைய வாய்ப்புள்ளது. இந்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.