மாநில நிதிக்குழு மானியத்தை விடுவிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மாநில நிதிக்குழு மானியத்தை விடுக்க வலியுறுத்தி, சாணாா்பட்டியில் ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள்.
சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள்.

மாநில நிதிக்குழு மானியத்தை விடுக்க வலியுறுத்தி, சாணாா்பட்டியில் ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மோகன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மாநில நிதிக்குழு மானியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாளா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். இணை இயக்குநா், உதவி இயக்குநா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com