திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,017 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,678 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனா். 150 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சிகிச்சையிலிருந்து குணமடைந்த 26 போ் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,419 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 15 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இதனால், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,147 ஆக அதிகரித்துள்ளது.