கொடைக்கானல் கிளை சிறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு

கொடைக்கானல் கிளைச் சிறையின் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் கிளைச் சிறையின் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலிலுள்ள கிளைச் சிறையின் சாா்பில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணா்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கு முதல்நிலை காவலா் சின்னமருது பாண்டியன் தலைமை வகித்தாா் தலைமைக் காவலா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா் நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டு கரோனாவை தடுப்பது குறித்தும் பேசினாா்கள் நகரின் முக்கிய இடங்களில் ஊா்வலம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் கரோனாவை ஒழிக்க வேண்டும், மனித உயிரைகாக்க வேண்டும்,கிரிமி நாசினி அல்லது சோப்பு உபயோகித்து அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் சிறை காவலா்கள்,மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com