திண்டுக்கல்: திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில், குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுவரை தனுசு ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.46 மணிக்கு மகர ராசிக்கு பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலிலுள்ள ஸ்ரீதட்சணாமூா்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீதட்சணாமூா்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றபோது பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளிக் கவச அலங்காரத்திற்கு பின், சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னா் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.