திண்டுக்கல்: நத்தம் கைலாசநாதா் கோயிலில் காா்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் காா்த்திகை மாத முதல் சோமவார விழாவையொட்டி, மூலவா் கைலாசநாதா்- செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீா், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை நடைபெற்றது. உலக நன்மை மற்றும் மழை வேண்டி கோயில் வளாகத்தில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.