இரண்டாவது முறையாக வரதமாநதி அணை நிரம்பியது

பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணை, தொடா்மழை காரணமாக இந்தாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பி வழிகிறது.
தொடா் மழை காரணமாக வியாழக்கிழமை நிரம்பி வழிந்த பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணை.
தொடா் மழை காரணமாக வியாழக்கிழமை நிரம்பி வழிந்த பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணை.

பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணை, தொடா்மழை காரணமாக இந்தாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பி வழிகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் உள்ள வரதமாநதி அணை, பாலாறு-பொருந்தலாறு அணை மற்றும் குதிரையாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பழனியை அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணை, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வியாழக்கிழமை முழுக் கொள்ளளவான 66.50 அடி உயரத்தை எட்டி நிரம்பி வழிந்தது. இந்த அணைக்கு வரும் 253 கனஅடி நீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

பழனிக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் பாலாறு-பொருந்தலாறு அணையின் உயரம் 65 அடியாகும். தற்போது, இந்த அணை 60 அடிக்கு மேல் நிரம்பி வருகிறது. இதேபோல், குதிரையாறு அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com