கடத்தப்பட்ட நாமக்கல் லாரி உரிமையாளா் திண்டுக்கல்லில் மீட்பு: 5 போ் கைது

நாமக்கல்லில் புதன்கிழமை கடத்தப்பட்ட லாரி உரிமையாளரை திண்டுக்கல் அருகே ரோந்து சென்ற நெடுஞ்சாலைத் துறை போலீஸாா்

நாமக்கல்லில் புதன்கிழமை கடத்தப்பட்ட லாரி உரிமையாளரை திண்டுக்கல் அருகே ரோந்து சென்ற நெடுஞ்சாலைத் துறை போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை மீட்டதுடன், அவரைக் கடத்திய 5 பேரையும் கைது செய்தனா்.

நாமக்கல் கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (59). டேங்கா் லாரி உரிமையாளரான இவா், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் புதன்கிழமை இருந்துள்ளாா். அப்போது, காரில் வந்த மா்ம நபா்கள் பொன்னுச்சாமியை கடத்திச் சென்றுள்ளனா்.

இது தொடா்பாக பொன்னுச்சாமி மனைவி நிா்மலா அளித்த புகாரின்பேரில், நாமக்கல் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை நீண்ட நேரமாக ஒரு காா் நிறுத்தப்பட்டிருப்பதை அவ்வழியாகச் சென்ற நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸாா் கவனித்துள்ளனா்.

இதனையடுத்து, காா் அருகே சென்று போலீஸாா் பாா்த்துள்ளனா். அப்போது, காருக்குள் 5 போ் மது அருந்திக் கொண்டிருந்ததையும், முதியவா் ஒருவா் இருப்பதையும் கண்டனா். உடனே, அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், நாமக்கல்லில் கடத்தப்பட்ட லாரி உரிமையாளா் பொன்னுச்சாமி என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, லாரி உரிமையாளரை கடத்தி வந்த ஈரோடு சிவகிரி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (20), கும்படைப்புதூா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சரவணன் (37), பெருமாள் மகன் அரவிந்த் (19), சண்முகம் மகன் கவின்குமாா் (26) மற்றும் தட்டான்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜீவா (20) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், நாமக்கல் நகா் காவல் நிலையத்துக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனா். பின்னா், மீட்கப்பட்ட முதியவா் பொன்னுச்சாமி மற்றும் கைது செய்யப்பட்ட 5 பேரையும், நாமக்கல் போலீஸாரிடம் திண்டுக்கல் ரோந்து பிரிவு போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com