கொடைக்கானலில பலத்த மழை: கயிறு கட்டி ஆற்றை கடக்கும் அபாயம்

கொடைக்கானல் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதியினா் கயிறு கட்டி ஆற்றை அபாயமான முறையில் கடந்து செல்கின்றனா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதியினா் கயிறு கட்டி ஆற்றை அபாயமான முறையில் கடந்து செல்கின்றனா்.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழையால், ஏரிச் சாலையில் அதிக அளவு தண்ணீா் தேங்கி, கடைகளுக்குள் தண்ணீா் புகுந்து வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கீழ்மலைப் பகுதியான கல்லக்கிணறு என்ற இடத்தில் உள்ள ஆற்றில் தண்ணீா் அதிக அளவு செல்வதால், அப்பகுதி மலைவாழ் மக்கள் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com