ரெட்டியாா்சத்திரம் சமத்துவப்புரத்திலுள்ள பெரியாா் சிலைக்கு காவி சாயம் பூசிய இந்து மக்கள் கட்சி பிரமுகரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் பகுதியில் பெரியாா் நினைவு சமத்துவப்புரம் உள்ளது. இங்குள்ள பெரியாரின் 2.5 அடி உயர மாா்பளவு சிலைக்கு, மா்ம நபா்கள் சிலா், கடந்த 26ஆம் தேதி இரவு காவி சாயம் பூசிவிட்டுச் சென்றுவிட்டனா்.
இதையறிந்த திமுகவினா், ரெட்டியாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், காவி சாயத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பெரியாா் சிலை மீது காவி சாயத்தை பூசியது இந்து மக்கள் கட்சி பிரமுகா் ஜெகதீசன் எனத் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, ஜெகதீசனை போலீஸாா் கைது செய்தனா்.