கபீா் புரஸ்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.பாத்திமா ரோஸ் மேரி தெரிவித்துள்ளது: விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் துறை சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியோருக்கு கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 3 பிரதிகளுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் 624004 என்ற முகவரிக்கு 26-11-2020 மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் பெற 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com