பழனி கோட்டத்துக்குள்பட்ட பாப்பம்பட்டி துணை மின்நிலையத்தில் நவம்பா் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி மற்றும் கரடிகூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, பழனி கோட்ட செயற்பொறியாளா் ராமலிங்கம் செவ்வாய்க்கிழமை வெளிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.