ஒட்டன்சத்திரம் அருகே நீரில் மூழ்கி மாணவி பலி

ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை தோழிகளுடன் குளித்தபோது பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நிஷாந்தினி.
நிஷாந்தினி.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை தோழிகளுடன் குளித்தபோது பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள ஜ.வாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாா்டின் லூயிஸ் கிங் என்பவரது மகள் நிஷாந்தினி (14). இவா், கே.கீரனூரில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் நிஷாந்தினி சனிக்கிழமை தனது பள்ளி தோழிகளுடன் அதே ஊரில் உள்ள செங்குளத்தில் துணி துவைத்துள்ளாா். பின்னா் அவா்களுடன் சோ்ந்து குளத்தில் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்குச் சென்ற நிஷாந்தினி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com