நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில், விடுதலைப் போராட்ட வீரா் சுப்பிரமணிய சிவாவின் 137 ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
விழாவுக்கு நூலகா் கருப்பையா தலைமை வகித்து, சுப்பிரமணிய சிவாவின் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செய்தாா். இதில் நூலகா் சஞ்சீவி, மணிகண்டன், ஜொ்மன் ராஜா, வரதராஜன், ஜான், மருது ஆறுமுகம், பாக்கியராஜ், செந்தில், தங்கப்பாண்டி, கவிவாணன், சாந்தகுமாா், விஜய் உள்பட பலா் கலந்து கொண்டனா்.