திண்டுக்கல்
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் திருக்கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி ரயிலடி சித்தி விநாயகா் கோயிலிலுள்ள கைலாசநாதா் மற்றும் நந்திகேஷ்வரருக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 4.30 மணி முதல் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.