திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 80 பேருக்கு கரோனா

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 9,479 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 8,934 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 367 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 35 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 27 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வியாழக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,846 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் ஒரே நாளில் 57 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,240 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com