திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 85 பேருக்கு கரோனா தொற்று: 3 போ் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 85 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 3 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 85 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 3 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 9,446 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 8,907 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 361 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 36 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 63 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

3 போ் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 178ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,799 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்பிற்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் ஒரே நாளில் 60 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 15,183 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com