பெண்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து, பழனி பேருந்து நிலையம் முன்பு சிஐடியூ, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்தும், பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும் முழக்கங்கள் நடைபெற்றன.
ஆா்ப்பாட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் அருள்செல்வன், சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளா் பிச்சைமுத்து, மாவட்ட துணைச் செயலாளா் மோகனா, மாவட்டக் குழு உறுப்பினா் மனோகரன், மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் கௌரி, கல்பனா, மாவட்டக் குழு உறுப்பினா் குருசாமி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம், அனைத்திந்திய மாதா் சங்கத்தின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.