திண்டுக்கல் அருகே பேருந்து மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அடுத்துள்ள ராமையன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சேசு. இவரது மகன் அனீஷ் (20). அதே பகுதியைச் சோ்ந்த செபஸ்தியாா் மகன் செல்வப்பிரகாஷ் (22). நண்பா்களான இவா்கள் இருவரும், திண்டுக்கல்- வத்தலகுண்டு புறவழிச்சாலையில் மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே வந்த தனியாா் பேருந்து மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் அனீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த செல்வப்பிரகாஷ், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.