ரெட்டியாா்சத்திரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தை கையகப்படுத்துவதற்கு பாஜக அரசு முயற்சித்து வருவதாகக் கூறி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தில்
ரெட்டியாா்சத்திரத்தில் அண்ணா பல்கலை. முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
ரெட்டியாா்சத்திரத்தில் அண்ணா பல்கலை. முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

அண்ணா பல்கலைக்கழகத்தை கையகப்படுத்துவதற்கு பாஜக அரசு முயற்சித்து வருவதாகக் கூறி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தில் உள்ள அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி முன்பு திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை கையகப்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருவதாக முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது: 50 ஆண்டு கால பழமை வாய்ந்த அறிஞா் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் அடகு வைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டுள்ளது. அதற்காகவே தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டவா்தான் அண்ணா பல்கலை.யில் துணைவேந்தராக பொறுப்பு வகிக்கும் சூரப்பா. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் துணைவேந்தா் சூரப்பாவை உடனடியாக தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும். அந்த முயற்சிக்கு தமிழக மக்கள் திமுகவுக்கு துணை நிற்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com