நவராத்திரி விழா: பழனி தண்டாயுதபாணி கோயிலில் அம்புவில் போடும் விழா ரத்து

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவையொட்டி நடைபெறும் சுவாமி புறப்பாடு, அம்புவில் போடும்

பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவையொட்டி நடைபெறும் சுவாமி புறப்பாடு, அம்புவில் போடும் நிகழ்ச்சி ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் அம்புவில் பெறுதல், கோதை மங்கலத்தில் வன்னிகாசுரம் வதை, சுவாமி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் கூறியது: இந்த ஆண்டும் நவராத்திரி விழா அக்.17 முதல் அக்.24 ஆம் தேதி வரை பழனி மலைக்கோயிலிலும், பெரியநாயகியம்மன் கோயிலிலும் நடைபெறுகிறது. ஆனால், இந்த ஆண்டு சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனைகள் மட்டுமே நடைபெறும். இவை முடிந்த பின் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முக்கிய நிகழ்வுகளான காப்புக் கட்டுதல், சுவாமி புறப்பாடு, அம்புவில் போடும் நிகழ்ச்சி ஆகியன ரத்து செய்யப்படுகின்றன. வழக்கமான பூஜைகள் விதிகளுக்கு உள்பட்டு நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com