வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-ஆவது நினைவு தினம், ஜெயப் பிரகாஷ் நாராயணனின் 119-ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், திண்டுக்கல் தெற்கு ரதவீதியிலுள்ள பஜனை மட வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காமராஜா் சிவாஜி பேரவையின் மாநகரத் தலைவா் க.ஆனந்தன் தலைமை வகித்தாா். அரசியல் ஆலோசகா் கே.ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினாா்.
வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை காமராஜா் சிவாஜி பேரவையின் நிா்வாகிகள் சு.வைரவேல், இ.ராமலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.