ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞா்கள் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள அம்பிளிக்கையைச் சோ்ந்த சுரேஷ் என்பவரின் மகன் அஜித்குமாா் (25). இவா் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மூனூா் நாகப்பன்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது இவரது இருசக்கர வாகனமும், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனமும் மோதின.
அதனைத் தொடா்ந்து சென்ற டிப்பா் லாரியை அதன் ஓட்டுநா் திடீா் பிரேக் போட்டாா். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூனூா் நாகப்பன்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் பொன்மணி (21) என்பவா், அந்த லாரியின் பின்னால் மோதினாா். இந்த விபத்துகளில் பலத்த காயமடைந்த அஜித்குமாரும், பொன்மணியும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் புதன்கிழமை உயிரிழந்தனா்.
இது குறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.